"ஆன்லைனில் 7 லட்சம் உறுப்பினர்கள் இணைத்துள்ளோம் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்" என் தேசம் என் உரிமை கட்சி நிர்வாகிகள் பேட்டி.

என் தேசம் என் உரிமை கட்சியில் இதுவரை ஆன்லைனில் 7 லட்சம் உறுப்பினர்கள் இணைத்துள்ளதாகவும் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவர் என கோவை மாவட்ட நிர்வாகிகள் பேட்டி.

என் தேசம்  என் உரிமை கட்சி கோவை மாவட்ட நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.இதில் பேசிய அக்கட்சியின் நிர்வாகிகள் கூறும்போது ஆர்.கே.நகர் இடைதேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியிட போவதாகவும் இதற்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக கூறினர்.

மக்களின் உரிமையை மீட்டெடுக்க உருவாக்கிய இயக்கம் கட்சியாக எழுச்சி பெற்றுள்ளதாக கூறினர். ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவது, மது ஒழிப்பு, மதசார்பற்ற நாட்டை உருவாக்குவது என பல்வேறு பொது கொள்கைகள் உள்ளதாகவும் இதுவரை 10 க்கும் மேற்பட்டோர் விருப்ப விண்ணப்பம் அளித்துள்ளதாக தெரிவித்தவர்களை பொதுமக்கள் மத்தியில் கேட்கபடும் 10 கேள்விகளில் சிறப்பாக பதில் அளிப்பவர் தேர்ந்தெடுக்கபட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்  என தெரிவித்தனர்.

மேலும் கட்சியில் ஆன்லைன் மூலம் இதுவரை 7 லட்சம் உறுப்பினர்கள் இனைத்துள்ளதாகவும் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவர் என தெரிவித்தவர்கள் கோவை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு வரும் 17 மற்றும் 18 தேதிகள் நடைபெறும் என தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...